Skip to main content

Posts

Showing posts from June, 2015

youtube

Filmibeat » Tamil » News சினிமா விழாவில் அரசியல்... நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்

ரஜினி - ஷங்கர் இணையும் மெகா படத்தில், இன்னொரு பெரிய நடிகரும் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா... அந்த இன்னொரு நடிகர் என முதலில் கமல் ஹாஸனை் என்றார்கள், பின்னர் ஆமீர்கான் என்றார்கள், அடுத்து விக்ரம் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர்... ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்ட் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது. 1/5 ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்ட அர்னால்ட் ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக அர்னால்ட் சென்னை வந்திருந்தார். அப்போது அவருடன் ஷங்கருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அப்போது மேடையிலேயே தமிழில் தனக்கும் ஒரு வாய்ப்புத் தருமாறு ஷங்கரிடம் அர்னால்ட் கேட்டது நினைவிருக்கலாம். சம்மதம் அதை வைத்து ஷங்கரும் இப்போது அர்னால்டை அணுகியிருக்கிறாராம். ரஜினிக்கு இணையான பாத்திரத்தில் அர்னால்ட் நடிக்கப் போகிறாராம். அர்னால்டும், இந்தியாவில் தனக்காக உள்ள ரசிகர் கூட்டத்தை மனதில் வைத்து நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல். 3/5 365 நாட்கள் ஷூட்டிங்... சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் அந்தப்படத்தின் வேலைகளில் படப்பிட

இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினி - ஷங்கர் படம்!

6 இந்தியாவின் பிரமாண்ட படம் என்று இதுவரை பாகுபலியைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா... இதனை மிஞ்சும் பிரமாண்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகவிருக்கிறது ரஜினியும் ஷங்கரும் மூன்றாவதாக இணையுதம் புதிய படம். பிரமாண்ட வெற்றிப் பெற்ற எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கவிருந்தார். அது எந்திரன் 2 என்றனர். ஆனால் அந்தப் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது 2016-ல் இந்த நிலையில் 2016-ல் ரஜினி - ஷங்கர் படம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தில் ரஜினியுடன் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கப் போகிறார். விக்ரம்தான் அந்த நடிகர் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அவர் சர்வதேச அளவில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடி ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு தரப்படும் சம்பளம், ஆசியாவில் எந்த நடிகரும் வாங்காதது என்கிறார்கள். இயக்குநர் ஷங்கருக்கு ரூ 20 கோடி சம்பளம் என்கிறார்கள். சம்பளம் ரூ 100 கோடி ரஜினி சம்பளம் தவிர்த்து, மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமே ர

கிசுகிசுக்கள் என்னை காயப்படுத்தின: ஆண்ட்ரியா வேதனை

ஆண்ட்ரியா 'இது நம்ம ஆளு', 'விஸ்வரூபம் 2' படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. தற்போது 'தரமணி' என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ஆண்ட்ரியா பற்றி கிசுகிசுக்களும் தொடர்ந்து வருகின்றன. மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' என்ற படத்தில் பகத் பாசில் ஜோடியாக ஆண்ட்ரியா நடித்தார். அந்த படம் ரிலீசானதும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பகத் பாசில் வெளிப்படையாக அறிவித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண்ட்ரியாவோ யாரையும் காதலிக்கவில்லை என்று மறுத்தார். இசையமைப்பாளர் அனிருத்துடனும் இணைத்து பேசப்பட்டார். இருவரும் முத்தமிடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மவுனமாக இருந்தார். 'தரமணி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போது கிசுகிசுக்கள் பற்றி கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது:– என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். தற்போது தெளிவாக

இளம் நடிகர்களுக்கு அறிவுரை கூறிய ராதிகா

முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதாவின் மகன் சித்து நாயகனாக அறிமுகமாகும் படம் 'உயிரே உயிரே'. இதில் சித்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தை ஜெயப்பிரதாவே தயாரித்திருக்கிறார். ஏ.ஆர். ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இந்தி நடிகர் அனில்கபூர், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று சித்துவை வாழ்த்தினர். இதில் ராதிகா பேசும்போது, ''இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக கலந்து கொள்கிறோம். ஆனால், இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் இப்படி இருப்பதில்லை. கீழே படுத்துக்கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார். நடிகர் சங்க பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாருடன்

சினிமா ஆன்ட்டி என்று கிண்டலடித்தவரை வறுத்தெடுத்த நடிகை சுவாதி!

நடிகர் நடிகைகள் ஃபேஸ்புக்கில் தங்கள் கருத்தை அல்லது புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் போதும் அவர்களின் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் மழை போல பொழிந்துவிடுவார்கள். ஆனால் நடிகைகளின் பக்கங்களில் சில ஆபாச கமெண்டுகளை போடும் விஷமிகள் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கண்டும் காணாமல் விடாமல் உடனடியாக பதிலடிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் நடிகைகள். இதற்கு முன்னோடியாக டிவிட்டரில் நடிகை விஷாகா சிங் தன்னை கேலி செய்த நபரைக் கண்டித்து அதிரடி கமெண்ட் போட்டார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகை சுவாதி ரெட்டி அவரது ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்த ரசிகருக்கு சரமாறியாக பதிலடி தந்துள்ளார். சுவாதி இன்ஸ்டாகிராமில் புடவை அணிந்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கமெண்ட் பகுதியில் ஒரு நபர், 'இது போல படங்களை போடவேண்டாம் ஆன்ட்டி போல இருக்கீங்க…' என்ற ரீதியில் கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு பதிலடியாக ஸ்வாதி, 'நான் ஆன்ட்டிதான். சங்கடப்படும் அளவிற்கு அது ஒன்றும் கெட்ட வார்த்தையில்லையே. உன் போன்றவர்களுக்குத்தான் இயல்பாக இருப்பது பிரச்னை. எப்போதும் ப