Skip to main content

Posts

Showing posts from July, 2015

youtube

Tamil News android app free download

https://drive.google.com/uc?id=0B05td06ptN_1NFhXcDBOMTY0ZmM&export=download

தமிழ் சினிமா நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: நடிகை ஆஷா சரத்

ஆஷா சரத் | கோப்பு படம் ஆபாச வீடியோ பதிவு தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை ஆஷா சரத் காட்டமாக தெரிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர் ஆஷா சரத். மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் தான் 'பாபநாசம்' என்பது குறிப்பிடத்தக்கது. 'பாபநாசம்' படத்தில் ஆஷா சரத் நடிப்பைப் பார்த்து 'தூங்காவனம்' படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார் கமல். சில நாட்களாக ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ என்ற வாசகங்களுடன் வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டு வந்தது. இதை மறுத்தும் விஷயமிகளைக் கண்டித்தும் ஆஷா சரத் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, "சிக்கலான நேரத்தில் என்னை ஆதரித்த, அக்கறை செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களுக்கு எனது இதயப்பூர்வ நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த முறையற்ற, தரக்குறைவான படங்களையும், பதிவுகளையும் பார்த்து அதிர்ச்சியுற்றேன். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்க வேலை செய்யும் இப்படிப் பட்

வாட்ஸ்-அப்பில் பரவும் பாபநாசம் நடிகை ஆசா சரத்தின் போலி ஆபாச படங்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார.

நடிகைகளின் ஆபாச படங்கள் 'வாட்ஸ்-அப்' களிலும், இன்டர்நெட்டிலும் பரவுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில்   ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் பரவியது. இந்த வரிசையில்  நடிகை ஆஷாசரத்தின் ஆபாச படங்களும் சேர்ந்துள்ளது. ஆஷா சரத், கமலஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.  மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்திலும்  இவர் இதே கேரக்டரில் நடித்து இருந்தார். நேற்று நடிகை ஆஷாசரத் கொச்சி போலீஸ் கமிஷனர் ஜேம்சை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் 'கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் நிர்வாண வீடியோ காட்சி வலம் வருகிறது. அது என்னுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஆஷாசரத் நிருபர்களிடம் கூறும்போது எனக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் News source : Dinamalar

இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க வித்யாபாலனுக்கு ரூ.18 கோடி சம்பளம்?

பாலிவுட் நடிகை வித்யாபாலன், இந்தியில் வெளிவந்த 'தி டர்டி பிக்சர்ஸ்', 'கஹானி' ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் நடித்த இந்த இரண்டு படங்களுமே இந்தியில் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டது. இந்த படங்களுக்கு பின்னர், திருமணம் செய்துகொண்ட வித்யாபாலனுக்கு தொடர்ந்து இந்தியில் படங்கள் சரிவர ஓடவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ஹமாரி அதுரி கஹானி' என்ற படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் வித்யாபாலனின் மார்க்கெட் இன்னும் சரிந்தபாடில்லை. உதாரணம், இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலனை நடிக்க வைக்க அவருக்கு ரூ.18 கோடி சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. வித்யாபாலன் நடித்த படங்கள் சமீபகாலமாக ஓடவில்லையென்றாலும், அவர் திறமையான நடிகை. தத்ரூபமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அவர் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்தவர். அதனாலேயே இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யாபாலனுக்கு இவ்வள

ரஜினி படம் குறித்து எதுவும் பேச முடியாது: ராதிகா ஆப்தே

ரஜினி - ரஞ்சித் படம் குறித்து தற்போது எதுவும் பேச முடியாது என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ராதிகா ஆப்தேவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். விரைவில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது. ரஜினி படம் குறித்து எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார் ராதிகா ஆப்தே. இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் "அப்படத்தில் இன்னும் நான் ஒப்பந்தமாகவில்லை. ஆகையால், தற்போது இருக்கும் நிலையில் அப்படத்தைப் பற்றி எதுவும் பேச முடியாது" என்று ரஜினி - ரஞ்சித் படம் குறித்து தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே பிரகாஷ்ராஜ், கலையரசன், 'அட்டகத்தி' தினேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இப்படத

பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்!

பாகுபலி படத்தில் தமன்னா (இடது), சினிமா விமர்சகர் அன்னா எம்.வெட்டிகாட் பாகுபலி படத்தை பார்த்து வியந்து, ரசித்து, சிலாகித்த நமக்கு கோப உணர்வு மட்டும் வராதது ஏன்? கோபம் ஏன் வரவேண்டும் எனக் கேட்கிறீர்களா? நாயகன் - நாயகிக்கு இடையேயான காமத்தின் வெளிப்பாடு இப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் விதமே கோபத்துக்கான காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் அப்படி ஒரு கோபம் வரவில்லை. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் - தமன்னா பாட்டியா நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் வசூலை வாரிக்கட்டிக் கொண்டிருக்கும் பாகுபலியில் உள்ள காட்சிதான் அது. அவந்திகா, துணிச்சல்மிகு போராளி. ஒரு நாள் ஏரிக்கரையில் அவள் கண் அயர அவளுக்குத் தெரியாமலேயே அவளது மெல்லிய கைகளில் ஓர் அந்நியன் ஓவியம் வரைந்து செல்கிறான். தனக்குத் தெரியாமல் தன் கையில் ஓவியம் வரைந்தது யார் எனக் கண்டுபிடிக்க அவந்திகா எத்தனிக்கிறாள். தோழியுடன் சேர்ந்து வியூகம் வகுத்து வில், அம்புடன் மரத்தின் மீது ஏறிக் காத்திருக்கும் அவள் மீது பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான் அந்த அந்நியன். பின்னர் மீண்டும் அவள் மீது ஓர் ஓவியம் தீட்ட

ரஜினியை மீண்டும் 'முள்ளும் மலரும்' காளியாக பார்க்கலாம்:

   இயக்குநர் ரஞ்சித் | கோப்பு படம் 'முள்ளும் மலரும்' காளி போன்ற கதாபாத்திரத்தில் தனது படத்தின் மூலம் ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று இயக்குநர் ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தம் மாதம் தொடங்க இருக்கிறது. ரஜினி படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே, இயக்குநர் ரஞ்சித் சமூக வலைத்தளம் உள்ளிட்ட எதிலுமே தலைக்காட்டுவதில்லை. முதன் முறையாக ஒரு விருது வழங்கு விழாவில் கலந்து கொண்டார் ரஞ்சித். அவ்விழாவில், "ரஜினிகாந்துடன் நான் இணைந்து பணியாற்றும் படத்தின் மூலம் 'முள்ளும் மலரும்' காளியை திரையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். எனது 'மெட்ராஸ்' திரைப்படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தின் பாத்திரங்கள் மிகவும் யதார்த்தமாக இருந்ததாக தெரிவித்தார். அதேபோல எனது படத்தில் இருக்க வேண்டும் என்று

எந்திரன் 2' அப்டேட்ஸ்: தீபிகா, கத்ரீனா உடன் பேச்சுவார்த்தை

'எந்திரன் 2' படத்தில் நாயகிகளாக நடிக்க தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர். 'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமாக 'எந்திரன் 2' என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எந்திரன் 2'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் உள்ளிட்டவர்கள் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள். நாயகிகளாக நடிக்கப் போவது யார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இந்தி திரையுலகின் முன்னணி நாயகிகளான தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரிடம் பேசி இருக்கிறார் ஷங்கர். முழுக்கதையையும் முடித்துவிட்டு தங்களுடைய பாத்திரங்களைப் பற்றி சொல்கிறேன். அடுத்த வருடம் ஆரம்பித்தில் தொடங்க இருக்கும் படப்பிடிப்புக்கு தேதிகள் இருக்குமா என்று இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். கதைக்கு முழுவடிவம்

அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை தொட்டு 'பாகுபலி' சாதனை

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் சர்வதேச அளவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியள்ளது. குறைந்த நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது. "வேறெந்த திரைப்படமும் இந்த சாதனையை படைத்ததில்லை. வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ரூ.140 கோடியை வசூலித்துள்ளது" என வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத் கூறியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பாகுபலி பெறும் என த்ரிநாத் கூறினார். "திங்கள்கிழமை படத்தின் வசூல் எவ்வளவு எனப் பார்க்க வேண்டும். பெரிய வீழ்ச்சி இல்லையென்றால் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள சல்மானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வரை பாகுபலியின் வசூல் தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்பாக இருக்கும்" என்றார் அவர்.    News source : The Hindu

TAMANNA IN BAHUBALI

கவர்ச்சியாக நடித்து அலுத்து போய் விட்டது: சுவேதா மேனன்

தமிழில் சினேகிதியே, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் சுவேதா மேனன் நடித்துள்ளார். மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். நிறைய படங்களில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்து இருக்கிறார். படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்துள்ளார். இணைய தளங்களில் அவரது ஆபாச படங்கள் பரவி கிடக்கின்றன. அத்துடன் தனது பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தும் பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை என்று சுவேதா மேனன் அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:– கவர்ச்சி வேடங்களில் நடித்து அலுத்து போய் விட்டேன். இனி அது போன்ற கேரக்டரை ஏற்க மனம் இல்லை. சவாலான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அது மாதிரியான கதைகளை தேடுகிறேன். காமெடி வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. பழைய இமேஜில் இருந்து என்னை மீட்டெடுப்பதை அவசியமாக கருதுகிறேன். எனக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்கப்போகிறேன். இவ்வாறு சுவேதா மேனன் கூறினார் News source : maalaimalar

Take a look at "TAMIL NEWS" free download

https://play.google.com/store/apps/details?id=app51158.vinebre

ஆபாச படம் வெளியானதால் ஓடி ஒளியவில்லை: வசுந்தரா

ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. வசுந்தரா ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் அப்படங்கள் இருந்தது. அது வசுந்தராதானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. இந்த ஆபாச படத்தை பார்த்து வசுந்தரா அதிர்ச்சியானார். திடீரென அவர் மாயமாகி விட்டார். மொபைல் போனையும் 'சுவிட்ச்ஆப்' செய்து விட்டார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 'புத்தர் ஏசு காந்தி' என்ற பெயரில் தயாராகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து வசுந்தரா கூறியதாவது:– எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவம் நிறைய பெண்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதுபோன்ற படங்களை நிறையபேருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவ

ரஜினியுடன் இணையும் விக்ரம்: 'எந்திரன் 2' அப்டேட்

2016ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. 2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது. தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். இறுதியாக, 'எந்திரன் 2' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத

NewsTime free android TAMIL app

News Time free android app for  tamil news very easy to install directly install from http://kalvisolai4u.blogspot.in and   http://ntdv247.blogspot.in/?m=1 no need of play store .very simple app for tamil news and kalvisolai Free Download