Skip to main content

Posts

Showing posts from August, 2015

youtube

போலி ஆபாச வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கவில்லை: நடிகை ஆஷா சரத் பேட்டி

மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷாசரத். இந்த படம் தமிழில் கமலஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக ஆஷாசரத் நடித்திருந்தார். தற்போது அவர் கமலஹாசனுடன் 'தூங்காவனம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நடிகை ஆஷாசரத் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் மலப்புரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலி ஆபாச வீடியோ வெளியானது பற்றியும் அது தனக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் ஆஷாசரத் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– எனது பெயரில் போலி ஆபாச வீடியோ வெளியானபோது நான் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். நான் திருமணம் ஆன பெண். 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனால் எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஆனால் அந்த வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு நன்

தமிழ் சினிமா படப்பிடிப்பில் மாற்றம்: செப்.17-ல் சென்னையில் தொடங்குறது 'கபாலி'

செப்.17-ல் மலேசியாவில் தொடங்கவிருந்த ரஜினி - ரஞ்சித் படப்பிடிப்பு, தற்போது அதே தேதியில் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு துவக்கத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கவிருக்கும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால், நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் விசா விவகாரங்கள் தொடர்பாக படப்பிடிப்பு தாமதமானது. செப்.17 படக்குழு சென்னையில் இருந்து கிளம்புவதாகவும், செப்.18 தேதி மலேசியாவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது சென்னையில் செப்.17ம் தேதி ரஜினி - ரஞ்சித் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சுமார் 10 நாட்கள் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, மலேசியாவில் படப்பிடிப்பு தொடர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 'கபாலி' படத்தில் கபாலீஸ்வரன் என்னும் தாதா பாத்திரத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். மயிலாப்பூரில் வசிப்பது போலவும், அதற்கு பிறகு ம

ரஜினி்க்கு வில்லன் : அர்னால்ட்டின் கனவு நிறைவேறுமா? rajini villan Arnold ?

ஷங்கரின் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக உள்ள எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், கபாலி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு, ஷங்கரின் இயக்கத்திலான "எந்திரன் -2" படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயின் கேரக்டரில் காத்ரீனா கைப்பும் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. எந்திரன் 2 படத்தில், முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது, பின், அஜித் அதிலிருந்து பின்வாங்கியதன் காரணத்தினால், ரஜினியே, அடுத்த பாகத்திலும் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எந்திரன் 2 படம், தமிழ், ஹிந்தி் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால், வில்லன் கேரக்டரில் அமீர் கானை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர். கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதால், அக்கேரக்டரில் நடிக்க அமீர் கானால் முடியவில்லை. பின் விக்ரமை படக்குழுவினர் அணுகினர். ( ஐ படத்திற்காக, 3 ஆண்டுகள் எப்படத்திலும் நடிக்காமல், முழுவதுமே விக்ரம் அர்ப்பணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது). பின் அம்

ரஜினியின் புதிய ஜோடி கத்ரீனா கைப் super star rajini heroin ketherina kaif.

ரஜினியின் 'கபாலி' பட வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் ரஜினியின் ஜோடியாக 'ராதிகா ஆப்தே' நடிக்கிறார். அடுத்து ரஜினி 'எந்திரன் – 2' படத்தில் நடிக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை 2016 ஜனவரி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஷங்கர் படங்களின் நாயகிகள் அனைவரும் பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறார்கள். ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜூன் ஜோடி மதுபாலா. 'காதலன்' படத்தில் நக்மா, 'இந்தியன்', 'முதல்வனில்' மனீஷா கொய்ராலா, 'எந்திரன்', 'ஜீன்ஸ்' – ஐஸ்வர்யாராய், 'பாய்ஸ்' – ஜெனிலியா, 'அந்நியன்' – சதா, 'சிவாஜி'யில் ஸ்ரேயா ஆகியோர் நடித்தனர். அடுத்து ஷங்கர் இயக்கும் 'எந்திரன் – 2' படத்துக்கு ரஜினி ஜோடியாக நடிக்க பாலிவுட் பிரபலம் கத்ரீனா கைப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. News source :maalaimalar

இன்டர் நெட்டில் பரவும் பாலிவுட் நடிகையின் நிர்வாண படம.Bollywood heroin nude photo in internet

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகை பிரீத்தி குப்தா. 'சகானி' இந்தி மெகா தொடர் மூலம் வட மாநில ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் நடித்த 'அன்பிரீடம' திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களின் ஓரின சேர்க்கை படமான இதில் முத்தகாட்சி, நெருக்கமான அரை நிர்வாண காட்சி ஆகியவை இடம் பெற்று இருந்தன. எனவே இந்த படத்தை இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரீத்தி குப்தாவின் நிர்வாண புகைப்படம், வீடியோ காட்சிகள் இன்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை சில தினங்களிலேயே லட்சகணக்கானவர்கள் பார்த்துள்ளனர். பிரீத்தி குப்தா இந்தி மாநிலங்களில் பிரபலமான நடிகை என்பதால் இந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் செல்போன், வாட்ஸ்–அப் என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அனுராப் காசிப் தயாரித்த குறும்படத்திற்காக இந்தி நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி வாட்ஸ் – அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பிரீத்தி குப்தாவின் நிர்வாண படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. News source maala

kabali heroine radika abdev

super star rajini heroine radika abdev

இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதலிடம்: 3–வது இடத்தில் சுருதிஹாசன.Google search first place radika a

இன்றைய தலைமுறையினரின் வாழ்வில் இரண்டற கலந்து இருப்பது இணையதள தொடர்பு. புதுப்புது விஷயங்களை இணையதள தேடல் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட 'பாலிவுட்' திரைப்பட ஹீரோயின்களில் முதல் இடத்தை பிடித்தது யார் என்று பிரபல நிறுவனம் ஒன்று சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் ஒட்டு மொத்த ஹீரோயின்களில் ராதிகா ஆப்தே முதல் இடம் பிடித்து இருக்கிறார். பாலிவுட் ஹீரோயின்களில் இணைய தளம் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் சன்னி லியோன் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்தார். இப்போது அவரை தள்ளி விட்டு ராதிகா ஆப்தே முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். ரஜினியுடன் 'கபாலி' படத்தில் ஜோடி சேர்ந்து இருப்பது, இவர் நடித்த 'அகல்யா' குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, ஹண்டர் படம், இவர் பற்றிய காதல் கிசுகிசு போன்ற காரணங்களால் இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். இது தவிர 30 வயதுக்கு கீழ் உள்ள பாலிவுட் நடிகைகளில் இணையதள தேடலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தீபிகா படுகோனே 2–வது இடத்தில் இருக்கிறார். சுர

தனுஷ் படத்தில் வித்யாபாலன்? vidyabalan in dhanush film?

தனுஷ் தற்போது 'விஐபி-2' படத்தை முடித்துவிட்டு, பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பொலிடிக்கல் திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல்வேறு முன்னணி நடிகைகளை பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் வித்யாபாலன் வில்லி வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடிக்காத வித்யாபாலன் இந்த படத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமாகவிருக்கிறார். தேசிய விருது கலைஞர்களான தனுஷும் - வித்யாபாலனும் ஒரே படத்தில் இணைவது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார். News source :maalaimalar

குத்தாட்டத்தில் களம் இறங்கிய நடிகை சோனியா அகர்வால.Sonia agarwal kutthu dance.

சோனியா அகர்வால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். செல்வராகவன் முதன்முதலாக டைரக்டு செய்த 'காதல் கொண்டேன்' படத்தில், அவர் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, '7 ஜி ரெயின்போ காலனி,' 'மதுர,' 'கோவில்,' 'ஒரு கல்லூரியின் கதை' உள்பட பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். டைரக்டர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் விவாகரத்தும் செய்தார். சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் மூலம் திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்த அவருக்கு அந்த வாய்ப்புகள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்த 'பாலக்காட்டு மாதவன்' படத்தில், சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்கு பிறகும் கதாநாயகி வாய்ப்புகள் அமையாததால், கதாநாயகியாகத்தான் நடிப்பது என்ற அவருடைய முடிவை மாற்றினார். இனிமேல் கவர்ச்சி நடனம் ஆடுவது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்

அசினை தொடரும் சோகம் asin getting struggle.

'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அசின் 'கஜினி'யில் நடித்து மிகப்பெரிய நடிகை ஆனார். இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை சென்ற அவர் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த இந்தி படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வெற்றன. பின்னர் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அசின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஆல் இஸ் வெல்' படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேர்ந்தார். இதற்கிடையே மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல்சர்மாவை அசின் காதலித்து கைபிடிக்கும் செய்தி வெளியானது. நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஆல் இஸ்வெல்' படத்துக்குப் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க அசின் ஒப்பந்தம் ஆகவில்லை. திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்கும் கடைசி படமாக இது அமைந்துள்ளது. அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்ந்த இந்த படம் அமோக வெற்றி பெறும். அந்த மகிழ்ச்சியுடன் சினிமா உலகத்துக்கு விடை கொடுத்து விட்டு இல்லற வாழ்க்கையில் இறங்கலாம் என்று அசின் நினைத்து இருந்தார். ஆ

இளமை தோற்றத்தில் கபாலி ரஜினி. super star rajini kanth young get up in kabaali .

ரஜினியின் புதிய படமான 'கபாலி' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது. ரஜினியை சமீபத்தில் இந்த பட இயக்குனர் ரஞ்சித் சந்தித்த போது, ரஜினி அவரிடம், 'மக்களின் ஆசீர்வாதத்தாலும், அவர்கள் என்னை நேசிப்பதாலும் நான் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை நீங்கள் விரும்பும்படி எடுங்கள். நடிகர்–நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை நீங்களே தேர்வு செய்யுங்கள். கதாபாத்திரங்களையும் உங்கள் விருப்பப்படி உருவாக்கலாம்' என்று சொல்லி டைரக்டருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியை மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1991–ல் வெளியாகி வெற்றி பெற்ற 'தர்மதுரை' படத்தில் ரஜினி தோன்றியது போன்ற இளமை ரஜினியாக மாறுகிறார். இதற்காக சிறப்பு மேக்–அப் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். 80–களில் ரஜினி இருந்தது போன்ற தோற்றத்தில் கபாலியில் அவர் நடிப்பார்

கலையரசனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி super star rajini giving surprises to kalaiyarasan

ரஜினி அடுத்ததாக அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'கபாலி' என பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். மேலும் 'மெட்ராஸ்' படத்தில் ரசிகர்களை கவர்ந்த கலையரசன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டோ ஷூட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலையரசனை முதல்முறையாக பார்த்த ரஜினி அவரை பெயர் சொல்லி அழைத்து பேசியிருக்கிறார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார் கலையரசன். மேலும் ரஜினி தன்னிடம் பேசியது குறித்து அவர் கூறும்போது, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இப்போதுதான் நேரில் சந்தித்தேன். அவர் என்னுடைய பெயரை சொல்லி அழைத்து பேசினார். இது என்னுடைய மிகப்பெரிய நாள். அவர் பேசியதும் என்னால் அதிர்ச்சியில் பேச முடியவில்லை. நான் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. வ

ரசிகர்களை கவர்ந்த அஜித் படத்தின் புதிய புகைப்படம்

ajith and laxmi menon . அஜித்தின் 56-வது படத்தை பற்றி தினமும் ஒரு புதிய செய்தி இணையதளங்களில் வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர். இதுவரை, இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். தற்போது, இப்படத்தில் இடம்பெறும் காட்சியொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், தெருவின் இருபுறங்களிலும் மக்கள் மேள தாளங்களுடன்  கைதட்டிக்கொண்டு இருக்க, நடுவே அஜித்தும், லட்சுமிமேனனும் கையில் லக்கேஜுடன் நடந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'வீரம்' படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் தாடி, மீசை வைத்து நடித்திருந்த அஜித், இந்த படத்தில் தாடி, மீசைக்கு கல்தா கொடுத்துவிட்டு, தலைமுடியை மட்டும் சால

திருமண நிகழ்ச்சியில் குஷ்புடன் செல்பி எடுத்து கொண்ட நடிகர் பார்த்திபன்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவுடன் நடிகர் பார்த்திபன் செல்பி எடுத்துகொண்ட போட்டோவை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர் தரப்பில் இருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் தெரிவித்தனர். நடிகர் சாந்தனு திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் வந்து திருமணதம்பதிகளை வாழ்த்துவிட்டு சென்றனர். இதில் நடிகர் பார்த்திபன்  இன்று சாந்தனுவின் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது நடிகை குஷ்பு உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். அடுத்த விநாடியே ரசிகர்களின் கமாண்டுகளும் லைக்குகளும் குவிய ஆரம்பித்தன. ஆனால் அதில் பெரும்பாலானாவை குஷ்புவிற்கு எதிரானதாகவே இருந்தது News source :Daily thanthi

மெரீனா கடற்கரை எனக்கு பிடித்த இடம்: நடிகை வேதிகா

வரலாற்று சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக்கால சென்னையையும் தற்போதைய சென்னையையும் ஒப்பிட்டு பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை அசை போடுகிறார்கள். ஆனால் இளம் புதுமுகமான நடிகை வேதிகாவுக்கு சென்னை புதுசு. அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டபோது, ''நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். இங்கு எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. நான் நடித்த முதல் பாடல்காட்சியும் மெரீனா கடற்கரையில் தான் எடுக்கப்பட்டது. தற்போது நான் நடித்து வரும் மதராசி படத்தின் மூலம் சென்னையின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன். பொதுவாக எனக்கு கடற்கரை நகரங்கள் மிகவும் பிடிக்கும். நகரங்களில் மற்ற இடங்களை விட கடற்கரைகள் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதும் ஒரு காரணம் ஆகும் என்றார். News source : maalaimalar

ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். பரத நாட்டிய கலைஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்றார். கமலஹாசன் நடிப்பில் இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இதிலும் அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆஷாசரத் தோன்றினார். இதில் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து கமலின் அடுத்த படமான தூங்காவனத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களிலும் பிரபலமான ஆஷா சரத்தின் ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியானது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷா சரத், தனது படத்தை மார்பிங் செய்து சிலர் வேண்டுமென்றே இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதில் ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ காட்சிகள் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு ஐ.பி. முகவரியில் இருந்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிய வந்தது. போலீசார்

விரைவில் முடிகிறது ரஜினியின் கபாலி பட பிரச்சினை.

ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு 'கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டது. ரஞ்சித் இயக்கும் இந்த படத்துக்கான பெயர் அறிவிக்கப்பட்டதும், மைசூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஏற்கனவே நான் இதே பெயரில் படம் எடுக்கிறேன். என்று தெரிவித்தார். இதனால் ரஜினி படத்துக்கு பெயர் சூட்டுவதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. இது குறித்து 'கபாலி' பட தயாரிப்பாளரும் நடிகர் சங்க தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கூறியதாவது:– எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்க முடிவு செய்ததும், இந்த பெயரில் வேறு யாராவது பதிவு செய்து இருக்கிறார்களா என்று பார்த்தோம் 'இல்லை' என்பதை உறுதி செய்த பிறகு தான் 'கபாலி' என்று பெயர் வைப்பதை அறிவித்தோம். பின்னர் தான் எங்களுக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியவந்தது. அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எங்களை தொடர்ப்பு கொள்ளவில்லை. அந்த தலைப்பை அவர்கள் புதுப்பிக்காததால் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் பக்கம் தவறு இல்லை. என்றாலும் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்து விடுவோம். இவ்வாறு அவர்

'நடிகர்' விஜய் நிராகரிப்பு பாதிக்கவில்லை... 'நண்பர்' சூர்யாவின் மறுப்பே வலித்தது: கெளதம் மேனன்

'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் இருவருடன் நடந்த விஷயங்கள் என்ன என்று விவரித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். பிரேம் சாய் இயக்கத்தில் நிதின் நடித்திருக்கும் 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படம் தமிழில் ஜெய் நடிக்க 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் தயாராகி வருகிறது. 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபட்டு வந்த கெளதம் மேனன் அளித்த வீடியோ பேட்டியில் 'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்கள் கைவிடப்பட்டது ஏன் என்று கூறியிருக்கிறார். 'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பது "ஒருவர் என்னிடம் வந்து நாம் நண்பர்களாக இருக்க முடியாது. தொழில்முறையாக மட்டும் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை நண்பர் என்று சொல்லிவிட்டு என்னை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் அது எனக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சூர்யாவிடம் மனக்கசப்பு ஏற்பட்டது. அவர

தமிழ் சினிமா ரஜினி - ரஞ்சித் படத்தின் போட்டோ ஷுட் தொடங்கியது

ரஜினியுடன் இயக்குனர் ரஞ்சித் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் பணிகள் இன்று போட்டோ ஷுட் உடன் தொடங்கியது. 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினி. தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இப்படத்துக்கு 'கபாலி' என்று பெயரிடப்பட்டு இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் இயக்குநர் ரஞ்சித். இந்நிலையில், இப்படத்தின் பணிகள் இன்று போட்டோ ஷுட் உடன் தொடங்கியது. இந்த போட்டோ ஷுட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார் ராதிகா ஆப்தே. இன்று நடைபெறும் போட்டோ ஷுட்டில் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே பங்கேற்று இருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது. அடுத்த மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி 60 நாட்கள் நடைபெற இருக்கிறது super star rajini film photo shoot sta

தமிழ் சினிமா நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை: த்ரிஷா

நாயகி' போட்டோ ஷுட்டில் த்ரிஷா நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று 'நாயகி' பட பூஜையில் த்ரிஷா தெரிவித்தார். த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், பிரம்மானந்தம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் படம் 'நாயகி'. கோவி இயக்கவிருக்கும் இப்படத்தை கிரிதர் மற்றும் பத்மஜா தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை சென்னையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பட பூஜை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் த்ரிஷா பேசியது, "இப்படத்தின் பாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணாத ஒரு பாத்திரமாகும். முழுக்க ஒரு பேய் காமெடி படம் நான் பண்ணியதில்லை. 'நாயகி' முழுக்க நாயகிக்கான படம் என்று கூற முடியாது. நிறைய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இயக்குநர் மிக அழகாக அமைத்திருக்கிறார். நிறைய பேய்ப் படங்கள் வந்திருக்கிறது. அதில் 90% படங்கள் வெற்றியடைந்து இருக்கின்றன. மக்களுக்கு அந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, எனக்கு அந்த மாதிரியான படங்கள் பிடிக்கும். 1980-களில் இருப்பது போன்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன், படம் முழுவதும் அப்படித் தான் வருவேன். நான் பேயா அல்லது கொல

தமிழ் சினிமா நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை: த்ரிஷா

'நாயகி' போட்டோ ஷுட்டில் த்ரிஷா நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று 'நாயகி' பட பூஜையில் த்ரிஷா தெரிவித்தார். த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், பிரம்மானந்தம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் படம் 'நாயகி'. கோவி இயக்கவிருக்கும் இப்படத்தை கிரிதர் மற்றும் பத்மஜா தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை சென்னையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பட பூஜை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் த்ரிஷா பேசியது, "இப்படத்தின் பாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணாத ஒரு பாத்திரமாகும். முழுக்க ஒரு பேய் காமெடி படம் நான் பண்ணியதில்லை. 'நாயகி' முழுக்க நாயகிக்கான படம் என்று கூற முடியாது. நிறைய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இயக்குநர் மிக அழகாக அமைத்திருக்கிறார். நிறைய பேய்ப் படங்கள் வந்திருக்கிறது. அதில் 90% படங்கள் வெற்றியடைந்து இருக்கின்றன. மக்களுக்கு அந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, எனக்கு அந்த மாதிரியான படங்கள் பிடிக்கும். 1980-களில் இருப்பது போன்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன், படம் முழுவதும் அப்படித் தான் வருவேன். நான் பேயா அல்லத

பேய் படத்தின் மூலம் பாடகியாகும் திரிஷா

திரிஷா தற்போது 'நாயகி' என்ற பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் பூஜையுடன் நடந்தது. இதில், திரிஷா கலந்துகொண்டு இப்படத்தில் நடிப்பது குறித்து பேசும்போது, நான் தற்போது 'அரண்மனை-2' என்ற பேய் படத்தில் நடித்து வருகிறேன். இதில், இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறேன். இருந்தாலும், என்னை மையப்படுத்தி உருவாகும் ஒரு பேய் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. அது இந்த படம் மூலம் நிறைவேறி விட்டது. இது பேய் படமா? அல்லது பழி வாங்கும் கதையா? என்று இப்போது சொல்ல முடியாது. படப்பிடிப்பு நடக்கும்போது இதுகுறித்து கூறுகிறேன். இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானனது. 1980-களில் நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்தில் நடித்திருக்கிற எல்லோருக்கும் அழகான கதாபாத்திரம். இப்படத்தில் எனக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் சரிசமமாக வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோவி. இந்த படத்தை நான் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். இதுமட்டுமில்லாமல், இப்ப

ரஜினியின் கபாலி படத்தில் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை

'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு 'கபாலி' என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா கஜராஜும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், தன்னுடைய அப்பா கஜராஜை ஜிகர்தண்டா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் 'முண்டாசுப்பட்டி' படத்தில் நந்திதாவின் அப்பாவாக நடித்தார். தற்போது, ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வரும் 'இறைவி' படத்திலும் கஜராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'கபாலி' படத்தில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கஜராஜ் கூறும்போது, நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருடைய நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். &

மூன்று முகம்' தலைப்பை வசப்படுத்த விஜய் - அட்லீ படக்குழு முயற்சி

இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் | கோப்பு படம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பாக 'மூன்று முகம்' என வைக்க சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வு, தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. கோவா படப்பிடிப்பைத் தொடர்ந்து சீனாவில் பாடலை ஒன்றை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. விஜய் உடன் சமந்தா, ராதிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் பாடல்களை ஏற்கனவே முடித்து கொடுத்துவிட்டார். முதன் முறையாக இப்படத்தில் இரண்டு பாடல்களை பாட இருக்கிறார். இந்நிலையில், படத்தின் தலைப்பாக 'மூன்று முகம்' இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் அட்லீ கருதி இருக்கிறார். இதற்கான தயாரிப்பு தரப்பு, சத்யா மூவிஸ் நிறுவனத்திடம

புதிய படத்தில் குண்டு பெண் வேடம் நடிகை அனுஷ்கா 20 கிலோ எடை கூடினார.

சென்னை, புதிய படத்துக்காக நடிகை அனுஷ்கா 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக காட்சி அளிக்கிறார். புதிய படம் நடிகை அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே 'அருந்ததி' படத்தில் இரு வேடங்களில் வந்து பேய்களுடன் சண்டை போட்டார். 'வானம்' படத்தில் விலைமாது வேடத்தில் துணிச்சலாக நடித்தார். 'தெய்வத்திருமகள்' படத்தில் தோன்றிய வக்கீல் கதாபாத்திரம் பேசப்பட்டது. 'இரண்டாம் உலகம்' படத்தில் வாள் சண்டை போட்டு அதிரடி வேடத்தில் கலக்கினார். 'பாகுபலி'யிலும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு அரண்மனையின் பாதாள குகைக்குள் அடைபட்டு கிடக்கும் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது 'இஞ்சி இடுப்பழகி' என்ற படத்தில் குண்டு பெண்ணாக இன்னொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உடல் பருமனாக இருக்கும் பெண் கேலி, கிண்டலுக்கு ஆளாகி, பிறகு வைராக்கியத்தோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து எப்படி தன் உடம்பை ஒல்லியாக மாற்றுகிறார் என்பதே கதை. 20 கிலோ இந்த படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடி குண்டு பெண்

விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கும் லிசி

கமலஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் லிசி. அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில், பிரபல டைரக்டர் பிரியதர்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பதை விட்டுவிட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இதற்கிடையே பிரியதர்சன்– லிசி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கடந்த ஆண்டு லிசி விவாகரத்து பெற்றார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். திலக்ராஜ் என்ற புதிய இயக்குனர் இயக்கும் 'இட்வெலக்கு ஷேஷம்' என்கிற மலையாளப்படத்தில் நடிக்கிறார். இதில் ஓமியோபதி டாக்டராக நடிக்க இருக்கிறாராம் News source :maalaimalar lisi actress acting again

3 வருடங்களுக்குப் பிறகு வெளியான சிம்பு படம். vaalu

3 வருடங்களுக்குப் பிறகு வெளியான சிம்பு படம். சென்னை காசி திரையரங்கில் படம் பார்க்க சிம்பு வந்திருந்தார். ரசிகர்களின் மகிழ்ச்சியை கேட்கவும் வேண்டுமா? பட்டாசு வெடித்து காதை பஞ்சராக்கினார்கள். அந்த வழியாக வண்டியில் சென்ற பாசஞ்சர்களுக்கு இது கண்கொள்ளா வேடிக்கை.  சிம்பு ரசிகர்களை கட்டிப்போடும் இளமை துள்ளல் கதை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹன்சிகாவை காதலிக்கிறார் சிம்பு. நான் ஏற்கனவே திருமணம் நிச்சயமானவள் என்று ஒதுங்கிக் கொள்கிறார் ஹன்சிகா. தாலி ஏறுகிற கடைசி நேரத்தில்கூட காதல் கைகூடவும், மாப்பிள்ளை இடமாறவும் வாய்ப்பிருக்கு என்று நண்பனாக ஹன்சிகாவுடன் ஒட்டிக் கொள்கிறார் சிம்பு. ஒட்டிக் கொண்டவர் ஹன்சிகாவை கட்டிக் கொண்டாரா, காதலிக்க வைத்தாரா என்பது கதை. பிளஸ் டூ வில் பெயிலாகிவிட்டு சொந்த முயற்சியில் வேலை தேடும் வேலையில்லா பட்டதாரி வேடம் சிம்புவுக்கு. பொழுதுபோகாதவனுக்கு பக்க துணை என்பது போல் சந்தானம். கூடவே விடிவி கணேஷ். கலாய்ப்பு என்றால் அப்படியொரு கலாய்ப்பு. காதல் நிறைவேறியதற்காக விடிவி கணேஷின் தங்கச் சங்கிலியை பிள்ளையார் கோவில் உண்டியலில் போடுவதும், அதன் பிறகு நடக்கும் கலாட்டாவும் திரை

Simbu and nayanthara

Simbu and nayanthara

கதாநாயகிகள் சம்பள பட்டியல் நயன்தாரா, அனுஷ்காவுக்கு ரூ.2½ கோடி 3–வது இடத்தில் தமன்னா

ஐதராபாத், நடிகைகள் நயன்தாராவும் அனுஷ்காவும் ஒரு படத்துக்கு ரூ.2½ கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். தமன்னா 3–வது இடத்தில் இருக்கிறார்.சம்பளம் உயர்வு பிரபல நடிகைகள் சம்பளத்தை திடீர் என உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிக்கிறது. தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபம் ஈட்டுகின்றன. இதனால் சம்பளத்தை ஏற்றியுள்ளார்கள்.தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.முதல் இடத்தில் நயன்தாரா நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2½ கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவர் மார்க்கெட் சரியவில்லை. தற்போது 'மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள்' ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.சம்பள பட்டியலில் அனுஷ்காவும் நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2½

ரஜினி படத்தின் தலைப்பு 'கபாலி'- ரஞ்சித் அறிவிப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'கபாலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, #Kabali என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வரத் தொடங்கியது. 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக் கொள்கிறார். 'காளி' என்ற தலைப்புக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை. பல்வேறு தலைப்புகள் இருந்தும் 'கபாலி' தலைப்பு சரியாக இருக்கும் என்று படக்குழு ஆலோசித்தது. ஏனென்றால் இப்படத்தில் ரஜினி பாத்திரத்தின் பெயர் 'கபாலீஸ்வரன்

சன்னி லியோனையும் விடவில்லை டப்ஸ்மாஷ் ஜூரம்

டப்ஸ்மாஷ் என்ற கடலி்ல், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் தற்போது ஐக்கியமாகியுள்ளார். ஸ்மார்ட்போன், மனிதர்களின் மூன்றாவது கையாக மாறியுள்ள நிலையில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் என்று அனனவரும் கலக்கிக்கொண்டிருக்க, டப்ஸ்மாஷ் ஆப், எல்லோரையும் தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. திரையுலக பிரபலங்கள் முதல் சாதாரண மக்களையும், இந்த டப்ஸ்மாஷ் விட்டுவைக்கவில்லை. தற்போது அனைவரும் டப்ஸ்மாஷில் அதகளப்படுத்திக்கொண்டிருக்க, புதுவரவாக அதில் இணைந்திருப்பவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். டப்ஸ்மாஷில், தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் ஒன்றன்பின் ஒன்றாக, சன்னி லியோன் பதிவேற்றியுள்ளார். ஒவ்வொரு டப்ஸ்மாஷிற்கும், தனித்தனியே, கேப்ஷனை இட்டுள்ளார்....தனது டப்ஸ்மாஷ் வேட்டை தொடரும் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளது, அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது News source : Dinamalar

காளியும் இல்லை; கண்ணபிரானும் இல்லை: ரஜினி படத்திற்கு மீண்டும் புதிய தலைப்பு?

ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் 'காளி' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகவும், பின்பு, 'கண்ணபிரான்' என்ற தலைப்பை வைக்க பரிலீசனை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்திகளை படக்குழுவினர் மறுத்தனர். தற்போது கடைசியாக இப்படத்திற்கு 'கபாலி' என்று தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் கபாலீஸ்வரன் என்பதால், அப்பெயரை சுருக்கி 'கபாலி' என்று வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மயிலாப்பூரில் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த கபாலியை மையப்படுத்தியே ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை

தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்

சினேகா-பிரசன்னா ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் முதல்முறையாக நடிகை சினேகா, சமூக வலைத்தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் சினேகா கூறி இருப்பதாவது, 'நான் தாயானவுடன் பதிவு செய்யும் முதல் டுவீட் இது. எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு முழுமையான பெண்ணாக மாறியதை தற்போதுதான் உணர்ந்துள்ளேன்' என்று கூறியதோடு குழந்தையோடு மருத்துவமனை ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் மனைவி என்ற பதவியில் இருந்து தான் அம்மா என்ற பதவிக்கு உயர்ந்துள்ளதாகவும், தனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சினேகா கூறியுள்ளார். பிரசன்னா கூறும்போது, 'தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவிய மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்த

குண்டு அனுஷ்காவை புகழ்ந்த சமந்தா

அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. இதில் அனுஷ்கா ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா குண்டான பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக அவர் 15 கிலோவுக்கு மேலாக உடல் எடையை கூட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த சமந்தா அனுஷ்காவை புகழ்ந்து கூறியிருக்கிறார். சமந்தா கூறும்போது, 'தற்போது கதாநாயகிகள் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை கூட்டி நடித்திருப்பது மிகவும் ஆச்சரியத்திருக்குரியது. தன்னால் முடிந்த அளவுக்கு படத்திற்கான ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அனுஷ்கா அக்கா சிறப்பான தோற்றத்தில் இருக்கிறார். படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்' என்றார். 'இஞ்சி இடுப்பழகி' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. News source:maalaimalar

ரஜினியின் புதிய பட பெயர் கண்ணபிரான்?

ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார் என்றாலே அதற்கு ரசிகர்களிடம் தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும். இப்போது ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கும் இந்த படத்தில், ரஜினி மகளாக தன்ஷிகா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் புதுப்பட 'சூட்டிங்' விரைவில் மலேசியாவில் தொடங்க இருக்கிறது. என்றாலும் படத்தின் பெயர் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இப்போது ரஜினியின் புதுப்படத்துக்கு 'கண்ணபிரான்' என்று பெயர் வைக்கப்படும் என்று தெரிகிறது. 'கண்ணபிரான்' என்ற பட தலைப்பை டைரக்டர் அமீர் சில வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்திருக்கிறார். ரஜினிக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்து விட்டது. எனவே, அமீரை அணுகி அந்த தலைப்பை பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. 'லிங்கா' பட தலைப்பையும், இயக்குனர் அமீர் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த தலைப்பை கொடுக்கும்படி கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட போது, 'நான் ரஜினிசாரின் மிகப்பெரிய ரசிகன் அவருக்கு இந்த பட தலைப்பை கொடுப்பதை பெருமையாக கருதுகிறேன்' என்று கூறினா

கிராஃபிக்ஸிலும் உறுப்புதானம் உண்டு!

பாகுபலி படத்தில் அதன் நாயகன் ஏற முயற்சிக்கும் அருவி இந்தியாவில் எங்கே இருக்கிறது என்று வியக்காத ரசிகர்கள் இல்லை. ஆஹா...! கண்களில் கொள்ளாமல் எவ்வளவு அழகு! ஒளிப்பதிவு எத்தனை குளுமை! இப்படியெல்லாம் இனி எழுத முடியாது. திரையில் நாம் காணும் பல ஆச்சரிய லொக்கேஷன்கள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தரும் விருந்து. பாகுபலி படத்தில் இடம்பெற்றது கேரளத்தின் சாலக்குடி அருவி. ஆனால் அதை இத்தனை பிரமாண்டமான அழகு கொண்ட அருவியாக மாற்றிக் காட்டியது விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம். அருவி மலைகள், நதியை மட்டுமல்ல; காட்டில் தனிமையில் காயும் நிலவின் குளிர்ச்சியையும், பாலை நிலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மையையும்கூட இன்றைய கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை உணரவைத்துவிடுகின்றன. பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் தந்திருக்கும் பிரம்மாண்ட உணர்வு இந்திய ரசிகர்களைப் பெருமைகொள்ள வைத்திருக்கிறது. ஆனால் அந்தப் படத்தின் பல காட்சிகளில் இன்னும் நேர்த்தி தேவை; குறிப்பாக காட்டெருமையுடன் நடிகர் ராணா மோதும் காட்சி அப்பட்டமான கிராஃபிக்ஸ் என்று காட்டிக்கொடுத்துவிட்டது. அந்தக் காட்டெருமை வெறும் 3டி காட

சினிமா காட்சிகளை மிஞ்சிய திகிலூட்டும் சிலை கடத்தல் சம்பவங்கள்: டைரக்டர் சிக்கியது எப்படி?- புதிய தகவல்கள்

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். இந்த சிலைகள் எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் ஆட்சி காலத்தில் நுட்பத்துடன் செதுக்கப்பட்டவையாகும். இந்த சிலைகளை வாங்கி தங்களது வீடுகளில் அழகுப் பொருளாக வைப்பதில் வெளிநாட்டினருக்கு அவ்வளவு பிரியம். இதனால் இதுபோன்ற சிலைகளை எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தும் வாங்குவதற்கு வெளிநாட்டினர் தயாராக உள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழக கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர். வெளி நாட்டினரின் இதுபோன்ற சிலை மோகமும், கோடிக் கணக்கில் அவர்கள் கொட்டிக் கொடுக்கும் பணமுமே, சிலை கடத்தல் கும்பலை கட்டிப் போட்டு வைத்துள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டினர் கை நிறைய அள்ளிக் கொடுக்கும் கோடிகளுக்கு ஆசைப்பட்டு தமிழக இளைஞர்கள் பலர் சிலை கடத்தல் மன்னர்களாக மாறி வருகிறார்கள். இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷமாக திகழ கூடிய பல ஆயிரம் ஆண

சிலை கடத்தல் வழக்கில் டைரக்டர் வி.சேகருக்கு சம்பந்தம் இல்லை: தமிழ் திரையுலகம் அறிக்கை.

தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், டைரக்டர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் 'கலைப்புலி' எஸ்.தாணு, டி.சிவா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, 'பெப்சி' சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:- தயாரிப்பாளர், கதாசிரியர், டைரக்டர் வி.சேகர் நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல், சமூக சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு சொன்னவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது சிலை கடத்தலில் ஈடுபட்டதாக பழி விழுந்திருக்கிறது. இதை கேட்டவர்களும், படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் டைரக்டர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் புழல் சிறைக்கு சென்று வி.சேகரை சந்தித்த போது, இந்த குற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். தான் எந்த ஒப்

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் என் தந்தையுடன் இணைந்து நடிப்பேன் சுருதி ஹாசன் சொல்கிறார்

சென்னை, நல்ல கதாபாத்திரம் அமைந்தால் என் தந்தையுடன் இணைந்து நடிப்பேன் என்று சுருதி ஹாசன் கூறினார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த ஸ்ரீமந்துடு படம் சமீபத்தில் வெளியானது. தமிழிலும் இந்த படம் செல்வந்தன் என்ற பெயரில் வந்தது. தற்போது விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. ஸ்ரீமந்துடு வெற்றிகரமாக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் அவர் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறியதாவது  என் தந்தையை போல் திரையுலகில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படவும் ஆசைப்படுகிறேன். உங்கள் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் அவரோடு சேர்ந்து நடிப்பேன்.  சினிமாவில் நடிக்க வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஏரோனட்டிக்கல் என்ஜினியர் ஆகி இருப்பே

சிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது?

குடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் 'பொண்டாட்டி சொன்னா கேக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'பொங்கலோ பொங்கல்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இவர் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகளை வி.சேகர் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்பே பிடிப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வி.சேகரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர். News source :maalaimalar

ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய பாபி சிம்ஹா

ஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தொடர்ந்து படங்களில் ஹீரோ வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'கோ 2', 'கவலை வேண்டாம்', 'உறுமீன்', 'பாம்பு சட்டை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதுமுக இயக்குனர் ராஜாராம் இயக்கும் புதிய படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ரஜினி நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த 'வீரா' படத்தின் தலைப்பை வைத்திருக்கின்றனர். ரஜினி படத் தலைப்பு தன்னுடைய படத்திற்கு கிடைத்துள்ளது பாபி சிம்ஹாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பாபி சிம்ஹாவின் 'கோ 2', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. News source :maalaimalar

என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்

மென்பொருள் பொறியாளராக ஆக முடியவில்லையே.., என பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ஏக்கத்தை புதிய கூகுள் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சையிடம் முன்னர் பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஷாருக் கானின் 'ஹேப்பி நியூ இயர்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் ஷாருக் கானுடன் கூகுளின் தற்போதைய சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் கலந்து கொண்டார். இந்த அரை மணிநேர அரட்டை நிகழ்ச்சியை கூகுள்ப்ளெக்ஸ் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சை ஷாருக் கானிடம் 'நீங்கள் உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள விரும்பினால், என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஷாருக் கான், என்ஜினியர் ஆக இருந்த எனது தாத்தா, பாட்டியைப் பார்த்தே வளர்ந்ததால் நானும், அவர்களைப் போலவே என்ஜினியராகவே விரும்புவேன் என பதில் அளித்திருந்தார். 'பார்க்க முட்டாள் போல தோன்றினாலும், நான் புத்திசாலி. பள்ளிப் பருவத்தில் மின்னணுவியல்(electronics) பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தொழிற்கல்வி நிறுவனமா

சிம்புவுக்கு போனில் வாழ்த்து கூறிய ரஜினி

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வாலு' படம் ஒருவழியாக ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டு புது தெம்புடன் வெளிவருகிறது. 'வாலு' வெளியாவதற்கு விஜய் மிகவும் உறுதுணையாக இருந்தார் என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வளவு தடைகளையும் தாண்டி வெளிவரும் 'வாலு' படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிம்புவை நேரடியாக போனில் தொடர்புகொண்டு, படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் ரஜினி. முதல் ஆளாக தனது படம் வெற்றியடைய ரஜினி வாழ்த்து கூறியது சிம்புவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 'வாலு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனமும், மேஜிக் ரேஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

ஜோக்கர் கதாபாத்திரம் பற்றிய அரிய தகவல்களுடன் புதிய ஆவணப்படம் - வீடியோ இணைப்பு

திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் பட்டியலில் எப்போதும் இருக்கும் பெயர் ஜோக்கர். அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர், பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ பட வரிசையான பேட்மேன் 2-ல் நடித்து அழியாப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய நடிகர் ஹீத் லெட்ஜர். பேட்மேன் 2 படம் வெளியானபோது அவரது ஜோக்கர் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும், பரவசமும் அடைந்தார்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள். ஜோக்கர் பாத்திரத்திற்காக ஹீத் லெட்ஜருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆனால் இவற்றை பார்க்கத்தான் ஹீத் லெட்ஜர் இல்லை. படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் மரணத்திற்கு அதிகப்படியான போதை மருந்துதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது ரசிகர்கள் ஜோக்கர் கதாபாத்திரத்தின் பாதிப்புதான் அவரது மரணத்திற்கு காரணம் என்று நம்புகிறார்கள். மரணம் அடையும்போது அவருக்கு வயது வெறும் 28 தான். ரசிகர்களின் நம்பிக்கையை உண்மையாக்கும் விதமாக "டூ யங் டு டை" என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீத் லெட்ஜர் எவ்வாறு ஜோக்கர் கதாபாத்திரத்திற்க

பிரசன்னா - சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

சினேகா வளைகாப்பின் போது பிரசன்னா வெளியிட்ட புகைப்படம் | கோப்பு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரசன்னா - சினேகா தம்பதிக்கு சென்னையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சினேகா. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சினேகா கர்ப்பம் தரித்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், இன்று காலை சென்னையில் பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது குறித்து பிரசன்னா, "நேற்றைய நாள் மிக நீண்ட நாள்; நேற்றைய இரவு ஒரு பிரகாசமான இரவு; அந்த நீண்ட இரவு மகிழ்ச்சியுடன் விடிந்தது. ஆம், எனது தேவதை ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்" என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.    News source :The Hindu

ஹன்சிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிம்பு

சிம்புவும் ஹன்சிகாவும் 'வாலு' படத்தில் நடிக்க தொடங்கியபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலிக்கும் செய்தி வந்த நேரத்தில் திரையுலகே ஆச்சரியத்தில் மூழ்கியது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி இவர்களுடைய காதல் ஓராண்டு கூட நிலைக்கவில்லை. வாலு படத்தின் படப்பிடிப்பில் நெருங்கி பழகிய இவர்கள் அந்த படப்பிடிப்பு முடிவதற்கு முன்னே தங்களுடைய உறவை முறித்துக் கொண்டனர். பின்னர் 'வாலு' படம் பிரச்சனையில் சிக்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாலு படத்தின் ஒரு பாடலுக்காக சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள். தற்போது 'வாலு' படம் ரிலீசாகும் தருவாயில் உள்ளது. இன்று ஹன்சிகா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு சிம்பு நள்ளிரவு 12 மணிக்கு தன்னுடைய டிவிட்டரில் ஹன்சிகாவிற்கு, "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இனிமையான ஆண்டாக அமையட்டும், கடவுள் அருள் கிடைக்கட்டும்," என சிம்பு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு ஹன்சிகா விடியற்காலை 5 மணிக்கு மேல் 'நன்றி சிம்பு' என நன்றி தெரிவித்தார். சிம்புவின் இந்த வாழ்த்து கோலிவுட் ரசிகர்கள்

ஆபாச சர்ச்சையில் சிக்கிய வசுந்தராவின் புதிய படம்

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா. சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணைய தளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இவர் ஆடையில்லாமல் இருப்பது போன்றும், படுக்கையறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் அப்படங்கள் இருந்தது. அந்த புகைப்படங்களில் இருப்பது நானில்லை என்று வசுந்தரா கூறியிருந்தார். இந்த சர்ச்சையில் சிக்கிய வசுந்தரா பல மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு 'புத்தர் இயேசு காந்தி' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் வசுந்தரா பத்திரிகையாளராக நடிக்கிறார். இவருடன் அசோக், கிஷோர், மதுமிதா, அகில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஆனால், மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்துவிட்டது. சக மனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான் 'புத்தன் இயேசு காந்தி' படம். இப்படத்தை வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கி வருகிறார். பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சா