Skip to main content

Posts

Showing posts from November, 2015

youtube

Rajinikanth reaches Bangkok for next shoot schedule of Kabali | Social M...

Super Star Rajinikanth Latest Movie Kabali Trailer HD 1080 |New Release ...

Audiences will get shocked after seeing Sowcarpet Rai Lakshmi – Director...

கவர்ச்சிக்கு மாறிய தமன்னா படவிழாவில் மெல்லிய ஆடையுடன் வலம் வந்தார்

தமன்னா கவர்ச்சிக்கு மாறி ரசிகர்கள் தூக்கம் கெடுத்துள்ளார். பாகுபலி படத்தில் . அந்த படத்தில் ரவிக்கை அணியாமல் பாடல் காட்சியன்றில் வந்து பரபரக்க வைத்தார். அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கினார். ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடைகளில் வருகிறார். ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழா நிகழ்ச்சியன்றில் தேகம் முழுவதும் தெரியக்கூடிய வகையில் மெல்லிய ஆடை உடுத்தி வந்து கூட்டத்தினரை பரவசப்படுத்தினார்.  இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர். படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க டைரக்டர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். தமன்னாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இனிமேல் படங்களில் தொடர்ந்து அவரை கவர்ச்சியாக பார்க்கலாம். NEWS SOURCE: DAILY THANTHI

திருமணம் குறித்து வதந்தி: நடிகர் சந்தானம் தரப்பு விளக்கம்

இணையத்தில் வெளியான சந்தானம் புகைப்படம் | ட்விட்டர் தளத்திலிருந்து இன்று (அக்டோபர் 4) காலையில் முதல் திருமணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் வதந்திகளுக்கு சந்தானம் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. 'இனிமே இப்படித்தான்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரிக்கிறார். 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாகிறார். இன்று (நவம்பர் 4) காலை முதலே வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நடித்த ஆஷ்னா சாவேரியை சந்தானம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது. திருப்பதியில் சந்தானம், ஆஷ்னா இருக்கும் புகைப்படமும் வெளியானது. இதுகுறித்து சந்தானம் தரப்பில் விசாரித்த போது, "நவம்பர் 15ம் தேதி முதல் சந்தானம் சார் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம்

வருகிற 8–ந்தேதி பாபிசிம்ஹா–ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம்

ஜிகிர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. சமீபத்தில் வெளியான மசாலா படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது கோ–2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். ‘உறுமீன்’ படத்தில் பாபிசிம்ஹா ஜோடியாக ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனன் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பாபிசிம்ஹா– ரேஷ்மிமேனன் நெருங்கி பழகினார்கள். காதல் பற்றி கேட்டால் இருவரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர். இப்போது இவர்கள் காதல், திருமணத்தை நெருங்கி இருக்கிறது. பாபிசிம்ஹா– ரேஷ்மி மேனன் திருமணத்தை இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் நடைபெறுகிறது. இருவரும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. news source:maalaimalar

super star rajini in malasiya

ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்புக்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். விமான நிலையத்திலேயே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலாய் மேயர் விருந்து அளித்தார். அந்த நாட்டு அரசு சார்பிலும் ரஜினி கவுரவிக்கப்பட்டார். ரஜினி வருகையை மலேசியாவில் உள்ள மக்களும் ரசிகர்களும் அவருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கொண்டாடி வருகிறார்கள். செல்லும் இடம் எல்லாம் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலேசியாவில் மலாய், சீன, தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள். இந்த நாட்டுக்கு வேறு நாட்டு தலைவர்கள், நடிகர்கள் பிரபலமானவர்கள் வந்து செல்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருகையை மலேசியா நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. எந்த பிரபலங்களையும் அந்த நாட்டு மக்கள் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளை மட்டும் கூட்டமாக சென்று ரசித்து பார்ப்பார்கள். ஆனால் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த நாட்டு மக்கள் இனமொழி பேதமின்றி வரவேற்று மகிழ்ந்தனர். மலேசியாவில் அவர் எங்கு சென்றாலும் ஏராளம

4–வது முறையாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் கமல்–அஜித் படங்கள்

கமலின் ‘தூங்காவனம்’ தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கி இருக்கிறார். கமல் படம் வெளியாகும் அதே நாளில் அஜித், சுருதிஹாசன் நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் ரிலீஸ் ஆகிறது. லட்சுமிமேனன், சூரி, தம்பி ராமையா நடித்திருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். கமல் படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. என்றாலும் கமல், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது புதிது அல்ல. ஏற்கனவே 3 முறை இவர்கள் படம் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. 1994 நம்பவர் 2–ல் கமலின் 'நம்மவர்' அஜித் நடித்த 'பவித்ரா' ஆகிய படங்கள் வெளியாகின. 2000–வது ஆண்டு பிப்ரவரி 18–ந்தேதி கமலின் ‘ஹேராம்’ அஜித்தின் ‘முகவரி’ படங்கள் திரைக்கு வந்தன. 2002–ம் ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 14–ந்தேதி கமல் நடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்’, அஜித் நடித்த ‘ரெட்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இப்போது 4–வது முறையாக கமல்–அஜித் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வர இருக்கின்றன.