ஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தொடர்ந்து படங்களில் ஹீரோ வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'கோ 2', 'கவலை வேண்டாம்', 'உறுமீன்', 'பாம்பு சட்டை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதுமுக இயக்குனர் ராஜாராம் இயக்கும் புதிய படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ரஜினி நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த 'வீரா' படத்தின் தலைப்பை வைத்திருக்கின்றனர். ரஜினி படத் தலைப்பு தன்னுடைய படத்திற்கு கிடைத்துள்ளது பாபி சிம்ஹாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பாபி சிம்ஹாவின் 'கோ 2', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News source :maalaimalar

Comments
Post a Comment