Skip to main content

youtube

தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்

சினேகா-பிரசன்னா ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் முதல்முறையாக நடிகை சினேகா, சமூக வலைத்தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தில் சினேகா கூறி இருப்பதாவது, 'நான் தாயானவுடன் பதிவு செய்யும் முதல் டுவீட் இது. எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு முழுமையான பெண்ணாக மாறியதை தற்போதுதான் உணர்ந்துள்ளேன்' என்று கூறியதோடு குழந்தையோடு மருத்துவமனை ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் மனைவி என்ற பதவியில் இருந்து தான் அம்மா என்ற பதவிக்கு உயர்ந்துள்ளதாகவும், தனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சினேகா கூறியுள்ளார்.

பிரசன்னா கூறும்போது, 'தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவிய மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்

News source:maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA